காரைக்காலில் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் இன்று முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் காரைக்கால் பிரிவில், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் 42 பேர் பணியாற்றி வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 மாத கால ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இன்று (டிச.22) முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
காரைக்காலிலிருந்து இயக்கப்படும் 32 பேருந்துகளில், போராட்டம் காரணமாக, இன்று 9 பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago