புதுச்சேரியில் இன்று புதிதாக 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு இல்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 13) கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,779 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 25, காரைக்கால் - 12, ஏனாம் – 2, மாஹே- 10 என மொத்தம் 49 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொற்று காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 619 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.65 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 492 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 201 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 136 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 536 (97.45 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 33 ஆயிரத்து 791 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 46 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago