திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் பெரியகருப்பன், அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உட்பட 11 பேர் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 1584 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரிய கருப்பன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “திருப்பத்தூர் தொகுதியில் முறைகேடுகள் நடந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதனால் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வழக்கை விசாரித்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
12 mins ago
சினிமா
20 mins ago
க்ரைம்
21 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago