புதுக்கோட்டை அருகே எழுந்து நின்று தனக்கு மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி கட்டிலில் படுத்திருந்த கல்லூரி மாணவியைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி அருகேயுள்ள கருக்கா குறிச்சி தெற்கு ஊராட்சியைச் சேர்ந்தவர் சப்பானி. இவரது மகள் சோனியா காந்தி (23). சென்னையில் எம்பிஏ படித்துவந்த கல்லூரி மாணவியான இவர், 2013 ஏப்ரல் 28-ம் தேதி தனது வீட்டின் அருகே கட்டிலில் படுத்திருந்தாராம்.
அப்போது, அவ்வழியாக சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் ந.பழனிவேல், கட்டிலைவிட்டு எழுந்து நின்று தனக்கு மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி சோனியா காந்தியைத் தாக்கிய தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய் யப்பட்டது. இவ்வழக்கு புதுக் கோட்டை மாவட்ட விரைவு நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பி.ரவி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago