சென்னையில் புயல், மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
நேற்று (நவ. 25) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று (நவ. 26) அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை - சைதாப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
10 mins ago
விளையாட்டு
26 mins ago
வாழ்வியல்
35 mins ago
ஓடிடி களம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago