சட்டப்பேரவை தேர்தலில் புதிய கூட்டணிகள் உருவாகலாம்; பழைய கூட்டணிகள் உடையலாம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர்கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

எதிர்பார்ப்பது நம்முடைய இஷ்டம். என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டியது உங்களுடைய (செய்தியாளர்கள்) கடமை.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டுள்ளதா?

இப்போது அதற்கான பதிலை சொல்ல வேண்டிய நேரம் இல்லை. பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம்.

தேர்தல் சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்?

அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும்.

இவ்வாறு கமல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

59 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்