கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனுமந்த நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (எ) வில்லங்கம் நாகராஜ் (46). இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். தமிழ்நாடு இந்து மகா சபை அமைப்பின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வில்லங்கம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாக சிலருடன் பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகாரளித்து, பாதுகாப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் நாகராஜ் நேற்று காலை 8.30 மணியளவில் அனுமந்த நகரில் நடைபயிற்சி மேற்கொண்டபோது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வெட்டி விட்டு காரில் தப்பிச் சென்றது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார், நாகராஜ் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டமாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘இந்த கொலை தொடர்பாக சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago