யானைகவுனி மூவர் கொலை: தலைமறைவாக இருந்த மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேர் கைது 

By செய்திப்பிரிவு

யானைகவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய மருமகள் ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஷ், ராஜி ஷிண்டே ஆகிய 3 பேரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை யானைகவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்த தலில் சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோர் நவ.11 அன்று மாலை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீட்டின் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தனர்.

அவர்களது மகள் பிங்கி (35) வீட்டுக்குச் சென்றபோது மூவரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் விசாரணையில் இறங்கிய போலீஸாருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

மூவரையும் கொலை செய்தது அவர்கள் வீட்டு மருமகள் ஜெயமாலாவும் அவரது உறவினர்களும் என்ற தகவல் கிடைத்தது. கொலை நடந்த வீட்டின் முன் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் மதியம் 3 மணி அளவில் மருமகள் ஜெயமாலா தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வருவது பதிவாகியிருந்தது.

பின்னர் போலீஸாரின் தொடர் ஆய்வில் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தியதில் அனைவரும் மகாராஷ்டிராவிலிருந்து காரில் சென்னை வந்தது தெரியவந்தது. கொலை செய்த பின்னர் அனைவரும் காரில் தப்பிச் செல்வதை ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கண்டறிந்தனர்.

பின்னர் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மகாராஷ்டிரா விரைந்தனர். அங்கு ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், உறவினர்கள் ரபீந்த்ரநாத், விஜய் ஆகியோரைக் கைது செய்தனர். ஜெயமாலா, அவரின் மற்றொரு சகோதரர் விலாஷ், ராஜி ஷிண்டே ஆகிய 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கு முன்னரும் இரண்டு முறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கணவர் குடும்பத்தாரைக் கொல்ல ஜெயமாலா முயன்றார். ஆனால், சந்தர்ப்பம் சரியில்லாததால் தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், நவ.11 அன்று சென்னைக்கு வந்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

கொலையில் 2 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மருமகள் ஜெயமாலாவிற்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது, சமூக ரீதியாக ஜெயமாலாவை ஷீத்தல் குடும்பம் சரியாக நடத்தவில்லை, சொத்துப் பிரச்சினை ஆகியவையே கொலைக்கான காரணங்கள் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸார் தலைமறைவான மருமகள் ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஷ், நண்பர் ராஜி ஷிண்டே ஆகியோரை மும்பை, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்தனர். அவர்களது புகைப்படத்தையும் அம்மாநில போலீஸாரிடம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் தமிழக போலீஸார் அளித்த புகைப்பட அடையாளத்தைக் கொண்ட ஒரு பெண், இரண்டு நபர்கள் செல்வதைப் பார்த்த டெல்லி போலீஸார், அவர்களை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்களை விசாரித்தபோது அவர்கள் ஜெயமாலா, விலாஷ், ராஜி ஷிண்டே எனத் தெரியவந்தது. இதையடுத்து தமிழக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தமிழக போலீஸார் டெல்லி சென்று அங்கு டிரான்சிட் வாரண்ட் வாங்கி சென்னை அழைத்து வருவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

34 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்