தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (09.11.2020 ) தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.
அடுத்த 48 மணி நேரத்தில் (10.11.2020) தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வீரகனூர் (சேலம்), தென்காசி, செங்கோட்டை (தென்காசி) தலா 4 செ.மீ., ராமேஸ்வரம், இரணியல் (கன்னியாகுமரி), வைப்பார் (தூத்துக்குடி) , காரியாபட்டி (விருதுநகர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) , கூடலூர் (தேனி) , திண்டுக்கல் தலா 3 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
5 mins ago
ஓடிடி களம்
12 mins ago
விளையாட்டு
17 mins ago
க்ரைம்
22 mins ago
வணிகம்
39 mins ago
தமிழகம்
43 mins ago
சுற்றுலா
47 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
57 mins ago
கல்வி
1 hour ago
கல்வி
26 mins ago