காற்றின் வேகமாறுபாடு; தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (09.11.2020 ) தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த 48 மணி நேரத்தில் (10.11.2020) தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வீரகனூர் (சேலம்), தென்காசி, செங்கோட்டை (தென்காசி) தலா 4 செ.மீ., ராமேஸ்வரம், இரணியல் (கன்னியாகுமரி), வைப்பார் (தூத்துக்குடி) , காரியாபட்டி (விருதுநகர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) , கூடலூர் (தேனி) , திண்டுக்கல் தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

12 mins ago

விளையாட்டு

17 mins ago

க்ரைம்

22 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

சுற்றுலா

47 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

கல்வி

1 hour ago

கல்வி

26 mins ago

மேலும்