ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட் கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை விதித்து, இந்த விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
விசாரணையின் போது நீதிபதிகள், ”பிரபலமானவர்கள் விளம்பரம் செய்யும் போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.
பொதுமக்கள் பலர் தங்களை பின்பற்றுவார்கள் என்பது தெரிந்திருந்தும் பிரபலமானவர்கள் அவ்வாறு செயல்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.
பிளே கேம்ஸ் நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், ட்ரீம் லெவல் விளையாட்டில் கிரிக்கெட்டிற்கான விளம்பரம் செய்பவர்களை தேவையில்லாமல் மனுதாரர் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார் என்றார்.
அதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா?கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? அவ்வாறு பயன்படுத்தாவிட்டால் யாரும் கிரிக்கெட்டை பார்க்கமாட்டார்கள்.
பிரபலமானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்கள் விளையாட வைக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்றனர்.
பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் கங்குலி, விராட்கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவ.19-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
சினிமா
16 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
53 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
13 hours ago
தமிழகம்
2 hours ago