கோகுல்ராஜ் கொலை வழக் கில் தேடப்பட்ட இளைஞர் கரூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் விசாரணை அதிகாரி யான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின் றனர்.
இதற்கிடையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் சிபிசிஐடி அலுவலத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், இதே வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை பேரவை நிர்வாகி சங்ககிரி அருண்(21), கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல், நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். பின்னர், நீதிபதி உத்தரவின்பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் இன்று ஆஜர்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
10 mins ago
உலகம்
31 mins ago
வாழ்வியல்
50 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago