தமிழகத்தில் இன்று புதிதாக 2,516 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 688 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 28) வெளியிட்டுள்ள விவரங்கள்:
"தமிழகத்தில் இன்று புதிதாக 2,516 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 1,508 பேர், பெண்கள் 1,008 பேர்.
தமிழகத்தில், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 32 ஆயிரத்து 620 பேர். பெண்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 99 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 555 பேர். 13-60 வயதுடையவர்கள் 6 லட்சத்து 2,918 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 88 ஆயிரத்து 278 பேர்.
இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 433. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 97 லட்சத்து 32 ஆயிரத்து 863.
இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 147. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 94 லட்சத்து 68 ஆயிரத்து 838.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 16 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 19 பேர் என, 35 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 4 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 31 பேர்.
இன்று 3,859 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 26 ஆயிரத்து 356 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 66, தனியார் சார்பாக 135 என, 201 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னை நிலவரம்
இன்று சென்னையில் புதிதாக 688 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. இன்று 957 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,616 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 7,804 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
53 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago