புதுச்சேரியில் இன்று புதிதாக 128 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 24) கூறும்போது, "புதுச்சேரியில் 3,865 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 103, காரைக்காலில் 8, ஏனாமில் 11, மாஹேவில் 6 என மொத்தம் 128 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34 ஆயிரத்து 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,013 பேர், காரைக்காலில் 229 பேர், ஏனாமில் 30 பேர், மாஹேவில் 63 பேர் என 2,335 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியில் 1,390 பேர், காரைக்காலில் 56 பேர், ஏனாமில் 69 பேர், மாஹேவில் 62 பேர் என 1,577 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 126 பேர், காரைக்காலில் 37 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 23 பேர் என 187 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 614 (86.81 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 824 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 100 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைய படுக்கைகள் காலியாக இருக்கின்றன. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு கரோனா நோயாளிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு, அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்க முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
21 mins ago
இந்தியா
45 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago