பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி; அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல: கமல்ஹாசன் கருத்து

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பழனிசாமிநேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல், பிஹாரில் அனைவருக்கும் இலவசமாக கரோனாதடுப்பூசி போடப்படும் என்றுபாஜக தேர்தல் அறிக்கையில்வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.

மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்றுஅவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்