அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுப் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் தொழிற் பயிற்சிப் பிரிவில், பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஓராண்டுப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ் இயங்கும், பூவிருந்தவல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் (ஆண்கள்/பெண்கள்) தொழிற் பயிற்சிப் பிரிவில், இலவச விடுதி வசதியுடன் பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கான ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பயிற்சியாளர்களுக்கு பயிற்சி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.300 அளிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 31.08.2020 அன்று 14 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 மற்றும் அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 23.10.2020 மாலை 5.45க்குள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்-புலனாய்வாளர்,

பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம்,

பூவிருந்தவல்லி, சென்னை -600 056.

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர்

பயிற்சிக்கான விவரங்கள்

1. பயிற்சி மற்றும் காலம்: புத்தகம் கட்டுபவர் (ஓராண்டுப் பயிற்சி) (ஆண்கள்/பெண்கள்)

2. பயிற்சிக்குத் தகுதியான நபர்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் (ஆண்கள்/பெண்கள்)

3. வயது வரம்பு: 14 வயது முடிந்தவராகவும் 40 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (31.08.2020-ன்படி)

4. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்

5. இதர விவரங்கள்: பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்

6. பயிற்சி அளிக்கப்படும் இடம் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056.

7. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 23.10.2020

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்