தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை (அக்.16) முதல் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் கடந்த 5மாதங்களுக்கும் மேலாக ஆம்னிபேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்யவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. ஆம்னி பேருந்துகளைஇயக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ளதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு வரும் 16-ம் தேதி முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்’’என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
சினிமா
13 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
37 mins ago
க்ரைம்
43 mins ago
க்ரைம்
52 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago