மதுரை அரசு மருத்துவமனையில் அதிகரித்த பிரசவங்கள்: கரோனா வார்டில் 250 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் இன்னும் ஓயவில்லை. இந்த நெருக்கடியான கால கட்டத்திலும் கர்ப்பிணிகள் மாதாந் திரப் பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

தனியார் மருத்துவமனைகள் தற்போதும் ‘கரோனா’ பாதித்த கர்ப் பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் மகப் பேறு சிகிச்சை மட்டுமில்லாது, அனைத்து உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளும் வழக்கம்போல் நடக்கின்றன. கரோனாவால் பாதிக் கப்பட்டிருந்தாலும் உரிய பாது காப்பு ஏற்பாடுகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், கர்ப்பிணிகள் மகப் பேறு சிகிச்சைக் காக அரசு மருத்துவ மனைகளை நம்பியிருக்க வேண்டி உள்ளது.

ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, விருது நகர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கரோனா வார்டு சிகிச்சை இருந்தாலும், கரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மட்டுமில்லாது சிக்கலான பிரச வத்துக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கே பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரச வங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு முன் மாதந்தோறும் 1,000 முதல் 1,200 பிரசவங்கள் நடந்தன. தற் போது 1,600-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. அதி லும், இதுவரை கரோனா பாதித்த 500 கர்ப்பிணிகளுக்கு மகப் பேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அதில், 250 கர்ப்பிணிகளுக்கு மருத்துவக் குழுவினர் பாதுகாப்பாகப் பிரவசம் பார்த்துள்ளனர். ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் தாயையும், சேயையும் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து டீன் சங்குமணி கூறியதாவது:

கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதனால் சிகிச்சை தாமதமாவதைத் தடுக்க பிரசவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்கினோம். அதனால் கரோனா இருந்தால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த நடைமுறையால் பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

மகப்பேறு அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சுமதி கூறும்போது, கரோனாவுக்கு முன், மதுரை அரசு மருத்துவமனையில் நாளொன் றுக்கு 40 முதல் 45 பிரசவங்கள் நடக்கும். தற்போது கூடுதலாக 20 முதல் 30 பிரவசங்கள் அதிகரித்துள்ளன. சில நாட்களில் நாளொன்றுக்கு 65 பிரசவங்கள் கூட நடந்துள்ளன. கரோனாவால் பாதித்த கர்ப்பிணிகளுக்கும், மற் றவர்களுக்கும் கூடப் பிரசவம் பார்த்தோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்