கையில் பணத்தை எடுத்துச் சென்று பை நிறைய பொருள் வாங்குவது அதிமுக ஆட்சி, அதேநேரத்தில், பை நிறைய பணத்தை எடுத்துச் சென்று கையில் பொருள் வாங்குவது திமுக ஆட்சி என்று விலைவாசி நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ருசிகர விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஏ.சவுந்தரபாண்டியன் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், திமுக ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து பேரவையில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல் வம் பேசியதற்கு அன்றைய நிதி அமைச்சர் அன்பழகன் அளித்த விளக்கத்தை படித்தார். விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்ற வகையில் அந்த விளக்கம் அமைந்திருந்தது.
அப்போது அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கையில் பணத்தை எடுத்துச் சென்று பையில் பொருள் வாங்குவது அதிமுக ஆட்சி. பையில் பணத்தை எடுத்துச் சென்று கையில் பொருள் வாங்குவது திமுக ஆட்சி” என்றார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
45 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago