பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கையும் வேறு நீதிபதி முன்பாகப் பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார்.
2017-ம் ஆண்டில் பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு சென்றது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்கும் விளக்கம் கேட்டு பேரவை உரிமைக் குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்தார். பின்னர் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக் குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கு.க.செல்வம் வழக்கை வேறு நீதிபதி முன்பாகப் பட்டியலிடும்படி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago