தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (செப். 27) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,544 பேர். பெண்கள் 2,247 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 462 பேர். பெண்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 316 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுக்குட்பட்டவர்கள் 23 ஆயிரத்து 399 பேர். 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 4 லட்சத்து 82 ஆயிரத்து 489 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 74 ஆயிரத்து 920 பேர்.

இன்று 96 ஆயிரத்து 102 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 71 லட்சத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 94 ஆயிரத்து 200 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 88 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 53 பேர் என, 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 3 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 77 பேர்.

இன்று 5,706 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 341 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 116 என, 182 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. இன்று 936 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,166 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 656 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்