தமிழகத்தில் தட்கல் முறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாமக் கல்லில் அமைச்சர் தங்கமணி செய் தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தட்கல் முறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தட்கல் முறையில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பம் செய்யலாம். மத்திய அரசின் கிசான் திட்டத் தில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ. 47 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
தமிழகம்
23 mins ago
ஓடிடி களம்
44 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
11 mins ago
தொழில்நுட்பம்
2 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
2 hours ago