தாராபுரம் அருகே 101 வயது அண்ணன் இறந்த தகவல் அறிந்த 98 வயது தங்கையும் இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம், தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன்(101), விவசாயி. இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள் உட்பட 5 பேர். இதில் 4 பேர் முன்னரே இறந்துவிட்டனர். காளியப்பன், அவரது தங்கை நல்லாத்தாள்(98) ஆகிய இருவர் மட்டும் பேரன், பேத்திகளுடன் ஒரே ஊரில் தனித் தனி வீடுகளில் வாழ்ந்துவந்தனர். இருவரும் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இருவரும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காளியப்பன் நேற்று முன்தினம் அதிகாலையில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்த சில மணி நேரத்திலேயே நல்லாத்தாளும் உயிரிழந்தார். இதுகுறித்து காளியப்பனின் பேரன் பெரியசாமி கூறும்போது, ‘‘தாத்தா காளியப்பனுடன் பிறந்த அனைவருமே மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். 6 மாதங்களுக்கு முன்பே பாட்டி நல்லாத்தாள், அண்ணன் இறந்த உடன் தானும் இறந்து விடுவேன், எங்கள் இருவரின் உடலையும் அருகருகே புதைக்க வேண்டும் என விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதன்படி இருவர் உடல்களும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டன” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
43 mins ago
ஜோதிடம்
58 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago