தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்

By செய்திப்பிரிவு

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்க கத்தில் ஆவண எழுத்தர், கணிப் பொறியாளர் (தலா ஓர் இடம்) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

விருப்பம், தகுதி உள்ளவர்கள் வெள்ளைத் தாளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த தேதி, மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப் பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அக்டோபர் 6 கடைசி நாள்

‘இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சி-48, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், 2-வது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை 600 040’ என்ற முகவரிக்கு அக்டோபர் 6-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-26215023 என்ற தொலைபேசியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்