சிறு, குறுந்தொழில்களுக்கு வழங்க நிர்ணயித்துள்ள அவசர கால கரோனா கடன்களை 100 சதவீதம் வழங்க வேண்டும் என்று மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சிறு, குறுந்தொழில்களுக்கு ரூ.74 லட்சம் கோடிக்கு கரோனா கால கடன்களை வழங்கி அனுமதிக்கப்பட்டநிலையில் ரூ.45 லட்சம் கோடிக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல் தனியார் வங்கிகள் ரூ.76 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டநிலையில் ரூ.56 லட்சம் கோடி மட்டுமே வழங்கியுள்ளனர். கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டில் வெறும் 33 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.
சமூக பொருளாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றில் சிறுதொழில்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
8-ம் தேதி கானொலி மூலம் சிறு, குறுந்தொழில்கள் சங்கங்கள், வணிக சங்கங்கள், வங்கியாளர்களுடன் சு.வெங்கடேசன் எம்பி கலந்துரையாடினார். அதில் அவர் , ‘‘மத்திய அரசு அறிவித்துள்ள அவசர கால கடன் வழங்க மதுரை மாவட்டத்திற்கு ரூ.606,04 கோடி
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் வங்கிகள் ரூ.283.37 கோடி கடன் வழங்கியுள்ளது. வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது’’ என்றார்.
அவரிடம் 100 சதவீதம் கடன் தொகையை வங்கிகள் மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வழங்க வலியுறுத்தினோம். அவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் முறையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
இந்தியா
16 mins ago
விளையாட்டு
5 mins ago
இந்தியா
21 mins ago
தமிழகம்
43 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago