புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் குடிசையில் வசித்து வரும் மாணவிக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று இலவச மனைப்பட்டாவை வழங்கினார்.
போரம் வடக்கிப்பட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் சத்யா(17). இவர் தன் தந்தை இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதித்த தாய் செல்வமணியுடன் காட்டில் குடிசையில் வசித்து வருகிறார். பிளஸ் 2 முடித்துள்ள சத்யா, மேற்படிப்புக்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ வரலாறு (தமிழ் வழி) பிரிவில் சேர்ந்துள்ளார்.
சத்யா கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவருவது குறித்து, ‘இந்து தமிழ்’ நாளி தழில் கடந்த செப்.4-ம் தேதி படங் களுடன் செய்தி வெளியானது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, இலவச மனைப்பட்டா, அரசு வீடு ஆகிய வற்றை வழங்குவதற்கான நடவடிக் கைகளை அன்றே மேற்கொண்டார்.
ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், சத்யா தங்கியுள்ள இடத்தை வருவாய்த் துறை அலுவலர்கள் அன்றே ஆய்வு செய்தனர். குடிசை உள்ள இடம் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான இடமாக இருப்பதால் அங்கு பட்டா வழங்க இயலாது என்பதால், அதற்குப் பதிலாக அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில், அரசு தொடக்கப் பள்ளி அருகே இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர்.
மேலும், சத்யாவின் மேற்படிப் புக்கான அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொள்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உறுதி அளித்திருந்தார். மாவட்ட மனநல திட்ட அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம், நேரில் சென்று சத்யாவின் தாய் செல்வமணியை மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் ஆட்சியர் அலு வலகத்துக்கு சத்யாவை நேற்று வரவழைத்த, மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி இலவச வீட்டு மனைப்பட்டாவை வழங்கினார்.
அப்போது, “ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம் பசுமை வீடு கட்டிக் கொடுக்கப்படும். மாவட்ட மனநல திட்டம் மூலம் சத்யாவின் தாய் செல்வமணிக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சத்யாவின் மேற்படிப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து கொடுக் கப்படும்” என்று ஆட்சியர் தெரி வித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாணவி சத்யா கூறியபோது, “வறுமையின் பிடியிலும், இருக்கக் கூட சரியான இடமின்றித் தவித்து வந்த எங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வரும் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும், மேலும் பல்வேறு வகையில் உதவி செய்யும் மக்கள் பாதை அமைப்பினர், ஆசிரியர்கள், சமூக சேவை அமைப்பினர் மற்றும் முகம், முகவரியைக் கூட தெரிவிக் காமல் உதவி செய்து வரும் அனை வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago