நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த செல்லக்கண்ணுவின் விசைப் படகில் அவரது தம்பி வடிவேலு உள்ளிட்ட 7 பேர், சங்கரின் விசைப் படகில் அவரது மகன்கள் கதிர் வேல், கலைக்குமார் உள்ளிட்ட 8 பேர் என மொத்தம் 15 மீனவர்கள் கடந்த 17-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் மீன் பிடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணத்துக்கும், பருத் தித்துறைக்கும் இடைப்பட்ட இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து, மீன் பிடித்ததால் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை கடற்படையினர், நேற்று காலை 15 மீனவர்களையும் காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைப் பார்கள் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago