சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை செய்த 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்ற 5 வயது சிறுவன் மாஞ்சா நூலில் சிக்கி கழுத்து அறுபட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மாஞ்சா நூல் பயன்படுத்த தடை இருக்கும் நிலையில், அதை மீறி ஏராளமானவர்கள் அதை தயாரித்தும், விற்பனை செய்தும், பயன்படுத்தியும் வந்தனர்.

சிறுவன் பலியான சம்பவத்தை தொடர்ந்து மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் நேற்று முதல் சென்னை மாநகர போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர், தண்டையார் பேட்டை, புது வண்ணாரப் பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விடுபவர்களை பிடிக்க போலீஸார் தனிப்படையை அமைத்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

மாஞ்சா நூல் விற்பனை செய்ததாக தண்டையார் பேட்டையை சேர்ந்த ராஜா, பழனி, ஏழுமலை, குணசேகர், கோவில்பிள்ளை, ராஜேஷ், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தான பாபு ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

4 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்