வசந்தகுமார் மறைவு: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் ஹெச்.வசந்தகுமார் காலமானதையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஹெச்.வசந்தகுமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹெச்.வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி கடந்த ஆக. 28-ம் தேதி காலமானார்.

இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது. இதனை அதிகாரப்பூர்வமாக மக்களவை செயலகம் இன்று (செப். 4) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஹெச்.வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது குறித்த அறிவிப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்