திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான் என, பொன்னேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழர்களின் நலன் காக்கும் தலைவர் என கருணாநிதி பொய் வேஷம் போடுகிறார். ஏழு தமிழர் களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு கெடு விதித்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட் டுள்ள 7 தமிழர்களை விடுவிக்க மறுக்கும் காங்கிரஸ் கட்சிதான், மகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநில வருவாய்த் துறை அமைச்சர் ரமணா, பொன்னேரி எம்எல்ஏ பொன்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
வேணுகோபாலை ஆதரித்துப் பேசும் நாஞ்சில் சம்பத்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 mins ago
க்ரைம்
9 mins ago
க்ரைம்
18 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago