சென்னை அரசு பொது மருத்துவமனையில் செய்யப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தமிழகம் முழுவதும் விரைவாக செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 3 நாட்களுக்கும் மேல் ஆகிறது. பரிசோதனை முடிவு வராமல் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றனர். பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிந்து கொள்ள வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
இந்நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கும் வசதியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமான பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இதுவரை 44 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இருமுறை அலைவதை தடுக்கும் வகையில், மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்பவர்களின் முடிவுகளை, அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்ற தகவல் 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்துக்குள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இந்த எஸ்எம்எஸ் வசதி ஏற்கெனவே மதுரை மற்றும் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும்.
அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 1.96 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் பேர் கரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். சென்னையில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த எஸ்எம்எஸ் சேவையை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
30 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
14 hours ago