தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரிப்பு; இன்று மட்டும் 107 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,270 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஆக.25) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,615 பேர், பெண்கள் 2,336 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர். பெண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 980 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 18 ஆயிரத்து 433 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 686 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 184 பேர்.

இன்று மட்டும் 70 ஆயிரத்து 221 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று 67 ஆயிரத்து 888 தனி நபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று 6,998 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 பேர்.

இன்று மட்டும் கரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் 42 பேர், அரசு மருத்துவமனைகளில் 65 பேர் என மொத்தம் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 95 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 12 பேர்.

தற்போது வரை 52 ஆயிரத்து 128 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,270 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 955 பேர்.

சென்னையில் இன்று 20 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 371 பேர் (வீட்டு சிகிச்சை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63 மற்றும் தனியார் சார்பாக 78 என, மொத்தம் 141 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்