தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்வு; இன்று மட்டும் 97 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இன்றைய (ஆக.23) நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,650 பேர். பெண்கள் 2,325 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 68 பேர். பெண்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்து 288 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை கரோனா பாதித்தவர்களில் 0-12 வயதுடையவர்கள் 17 ஆயிரத்து 928 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 960 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 48 ஆயிரத்து 497 பேர்.

இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 127. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 6,617.

இன்று 68 ஆயிரத்து 111 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 21 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 76 பேர் என மொத்தம் 97 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 6,517 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 10 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 87 பேர்.

தமிழகம் முழுவதும் தற்போது 53 ஆயிரத்து 541 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 6,047 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 13 ஆயிரத்து 223 பேர் (வீட்டில் தனிமைப்படுத்துதல் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 1,040 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 9,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2,581 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63, தனியார் சார்பாக 76 என, 139 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

13 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்