சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பணிக்குச் செல்வோருக்காக இயக்கப்படும் அரசு பஸ்சில் பொதுமக்களை ஏற்றுவதால் கூட்டல் நெரிசல் ஏற்படுவதாக அரசுப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து பஸ்களை இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அரசுப் பணியாளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவகங்கைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அரசுப் பணியாளர்கள் பயனித்து வந்தனர்.
இந்நிலையில் மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் பொதுமக்கள் ஏறுவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்படுவதால் அரசுப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்தள்ளனர்.
இதுகுறித்து அரசுப் பணியாளர்கள் கூறுகையில், ‘அரசுப் பணியாளர்கள் மட்டும் சென்றபோது சமூக இடைவெளியுடன் பயணித்து வந்தோம். ஆனால் தற்போது பொதுமக்களையும் ஏற்றுவதால் கூட்டல் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் கரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago