தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கு- தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இதுகுறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

தேர்தல்களில் போட்டியிட ஏற்கெனவே பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருப்பதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதுதொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகள் 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, இந்த வழக்கை விசாரித்து, இதுதொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்