தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில், பசுமலையில் முன்னாள் முதல்வரின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் பழனிவேல் தியாகராஜன், மருத்துவர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள்மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், அய்யர்பங்களாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலர் பி. மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் முன்னாள் முதல்வரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பி. மூர்த்தி எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருமங்கலம் கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் படத்திற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி ரா முத்தையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
துய்மைப்பணியாளர், மருத்துவர்கள், செவிலியர் என, 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆ.கொக்குளம், செக்கானூரணியில் ஒன்றிய செயலர் தனபாண்டியன்தலைமையில் தெற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் முன்னாள் முதல்வரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதே போன்று மாவட்டம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் கலைஞரின் உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்தனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
உலகம்
20 mins ago
வணிகம்
37 mins ago
சினிமா
59 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
6 hours ago