போக்குவரத்து வீதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதத் தொகை செலுத்துவதில் சிக்கல்: இ-சலான் திட்ட குளறுபடியால் ஓட்டுநர்கள் அச்சம்

By என்.சன்னாசி

தமிழகத்தில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் உட்பட 12-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் வசூலிக்க, கடந்தாண்டு இ-சலான் திட்டம் அமல் படுத்தப்பட்டது.

அனைத்து விதிமீறலுக்கும் உரிய அபராதத் தொகையை டெபிட், க்ரெடிட் கார்டுகள் மூலமே வசூலிக்கப்படு கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராத தொகை குறிப்பிடாமல் இ-சலான் ரசீது வழங்கி, நீதிமன்றத்தில் செலுத்த போலீஸார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

தற்போது, இதுவே அனைத்து மாவட்டத்திலும் நடைமுறையில் உள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் வாகனத் தணிக்கை போலீ ஸாருக்கு இ-சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெபிட், கிரிடிட் கார்டுகள் வசதி இல்லாதவர்களுக்கு விதிமீறல்கள் விவரம் அடங்கிய இ-சலான் ரசீது வழங்கப்படுகிறது.

இதன்மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் எஸ்பிஐ வங்கி, இ- சேவை மையங்கள் அல்லது ஆன்லைனில் உரிய அபராதத் தொகையை செலுத்தவேண்டும்.

இல்லையெனில் வாகனத்தை உரிமம் ரத்து, பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, சம்பந்தப்பட்ட போலீஸார் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்புகின்றனர்.

இருப்பினும், அரசு இ-சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையை பெரும்பாலும் செலுத்த முடியாத சூழல் உள்ளது. இ-சேவை மையங்களில் அலைக் கழிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தனியார் ஆன்லைன் மையங்களில் அபராத தொகை செலுத்த ரூ. 30 முதல் 50 வரை சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சர்வீஸ் கட்டண மின்றி சொந்த மொபைல் போன், கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் செலுத்த முயன்றால் வாகன பதிவெண், எஞ்சின், சேஸ் எண் போன்ற விவரங்களை குறிப்பிடவேண்டி இருக்கிறது.

இவற்றை பதிவிட்டு சென்றாலும், பணம் செலுத்து வதில் சிக்கல் உள்ளது. சம்பந்தமின்றி விதிமீறல் விவரம் வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் இ- சலான் ரசீதில் இடம் பெறும் விவரங்கள் அழிந்து விடுகின்றனர்.

இது போன்ற குளறு படியால் அபராதம் செலுத்த முடியாமல் போலீஸாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இத்திட்டத்தை எளிமையாக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாறன் கூறுகையில், கார்டு இன்றி, இ-சலான் ரசீது பெற்று அபராதத் தொகை செலுத்தும் வகையில் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள தேசிய தகவல் தொடர்பு மையம் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

விரைவில் நடைமுறைக்கு வரும். மேலும், வாகன ஓட்டிகளின் சிரம்மத்தை கருத்தில் கொண்டு தபால் நிலையங்கள் மூலம் அபராத தொகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்