தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஆக.5) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
"தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் பெண்கள், 27 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள்.
இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 13 ஆயிரத்து 520 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 166 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்று மட்டும் 59 ஆயிரத்து 156 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 தனிநபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று தனியார் மருத்துவமனையில் 28 பேர், அரசு மருத்துவமனையில் 84 பேர் என, மொத்தம் 112 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 104 பேர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 184 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 997 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 90 ஆயிரத்து 966 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 811 பேர் (வீட்டுத் தனிமை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 60 மற்றும் தனியார் சார்பாக 65 என, 125 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
விளையாட்டு
19 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago