தடயவியல் அதிகாரி தற்கொலை

By செய்திப்பிரிவு

வடபழனியில் தடயவியல் பெண்அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வடபழனி, கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யுவராணி (49). இவர், மெரினா கடற்கரையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். கடந்த 1-ம் தேதி இவர், வீட்டின் கழிப்பறையில் இருந்த ரசாயன கலவையை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

போலீஸார் விசாரணை

இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்துவடபழனி காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

34 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

42 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

27 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்