வழக்கறிஞரை காவல் நிலையத்தில் தாக்கிய புகாரில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீஸார் மீது சிபிசிஐடி வழக்கு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து வழக்கறிஞர் செம்மணி என்ற ராஜரத்தினம் என்பவரை தாக்கியது தொடர்பான புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீஸார் மீது திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினத்தை கடந்த 3.11.2017-ம் தேதி ராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தனிப்பிரிவு போலீஸார் தாக்கியதாக புகார் அளித்திருந்தார்.

ஆனால் அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார் மீது விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய 2018-ல் உத்தரவிட்டது. ஆனாலும் போலீஸார் காலம் தாழ்த்தியதால் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ராஜரத்தினம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து அப்போதைய வள்ளியூர் டிஎஸ்பி குமார் மற்றும் பணகுடி இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்டீபன் ஜோஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் பழனி, விமல்குமார், முகமது சம்சீர், சிறப்பு பிரிவு போலீஸார் செல்லதுரை, சாகர், ஜோஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், வீடு புகுந்து தாக்கி ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்