கேரளாவைப் பின்பற்றி குமரியிலும் ஒரு நாள் முன்னதாக பக்ரீத் பண்டிகை

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாக நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்களின் தியாகத் திரு|நாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கேரளாவில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகள் ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடப்படும். இதைப் பின்பற்றி,கேரளாவின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் நேற்றேபக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கரோனா ஊரடங்கால் பொதுஇடங்களில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். நாகர்கோவில் இடலாக்குடி, இளங்கடை, வடசேரி, கன்னியாகுமரி, திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், மணவாளக்குறிச்சி, தேங்காய்பட்டினம், திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் வீட்டு மொட்டை மாடி மற்றும் வீட்டு வளாகங்களில் அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குர்பானி கொடுத்து நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

43 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

28 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்