தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் கல்யாணராமன் (54). அவருக்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன் பிறகு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி ஆண்டாள் தெருவை சேர்ந்த 82 வயது முதியவர் கரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 22-ம் தேதி குணமடைந்து வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே அவர் இறந்தார். மேலும், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 77 வயது ஆண் ஆகிய இருவரும் இன்று கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். இது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 220 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,812 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 4,494 பேர் கரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். 43 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago