தமிழக கடலோரம், உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், ‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

ஞாயிறு காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 9 செமீ, புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்