செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாமல்லபுரத்தில் தொற்று இல்லாமல் இருந்தது. கடந்த மே மாதத்தில் மாமல்லபுரம் கரோனா தொற்று இல்லாத பேரூராட்சியாக விளங்கியது.
தற்போது சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், கடலோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள் சிலரின் உதவியோடு ஊரடங்கு உத்தரவை மீறி கடல் வழியாக படகில் பயணித்து சொந்த ஊர்களுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னையின் கடலோர பகுதியை சேர்ந்த சிலர் படகுமூலம் மாமல்லபுரத்துக்கு வந்தனர்.தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில், ஒரேநாளில் 6 பேருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், மாமல்லபுரத்தில் நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இதை தடுக்க வேண்டும் என மாமல்லபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 secs ago
இந்தியா
22 mins ago
க்ரைம்
26 mins ago
இந்தியா
35 mins ago
விளையாட்டு
36 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago