தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கைக் கடற்படை

By பிடிஐ

கச்சத்தீவில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் படகு மூழ்கியது. அதிலிருந்த 3 மீனவர்களைக் காப்பாற்றி இலங்கை கடற்படை கைது செய்தது.

உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் கூறும்போது, "கச்சத்தீவுப் பகுதியில் படகுகளிலிருந்து மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் இவர்களை அச்சுறுத்தும் விதமாக துரத்தியதில் பதட்டமடைந்ததில் படகு கவிழ்ந்தது.

இதனையடுத்து இலங்கைக் கடற்படையினர் இவர்களையும், படகையும் மீட்டு தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர், இதில் மீனவர் ஒருவரைக் காணவில்லை" என்றார்.

மீனவர்களின் வலைகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், 6 படகுகளை சேதம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

காணாமல் போன மீனவர் குறித்து கடலோரக் காவற்படை மற்றும் கடற்படை போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்