தமிழகத்தில் இன்று 4,496 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,291 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.
4,496 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 28.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,291 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,51,820-ல் சென்னையில் மட்டும் 80,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 53 சதவீதம் ஆகும். 1,02,310 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 67.3 சதவீதமாக உள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.
தமிழகம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 80 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 71 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,494 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 66 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,71,101.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,167-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,167 பேரில் சென்னையில் மட்டுமே 1,318 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
* தற்போது 54 அரசு ஆய்வகங்கள், 53 தனியார் ஆய்வகங்கள் என 107 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,340 .
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 17,36,747.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 41,382.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,798.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,328.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 92,514 பேர்/ பெண்கள் 59,283 பேர்/மூன்றாம் பாலினத்தவர் 23 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,680 பேர். பெண்கள் 1,816 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,000 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,02,310 பேர் .
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 68 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,167 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago