வேளச்சேரி மின்சார ரயில்கள் ஆதம்பாக்கம் வரை விரைவில் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் ரயில்சேவையை, பரங்கிமலை வரைநீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவுசெய்தது. முதல்கட்டமாக வேளச்சேரி - புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் திட்டப் பணிக்கு இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளதால், மீண்டும்டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இருப்பினும், வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. எனவே, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்