தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் 2-வது நாளாக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால் விநியோகம், மருத்துவ செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 6-ம் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்த பகுதிகளில் தளர்வுகளும், அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு பாதி யாக குறைந்துள்ளது. அதே நேரம் மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் தேவைப்படும் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜூலை மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமை களும் (5, 12, 19, 26 தேதிகள்) தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த ஞாயிறு(ஜூலை 5) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2-வது வாரமாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
பால், மருத்துவ சேவைகள்
பால் விநியோகம், மருத்துவ மனை, மருந்தகங்கள், மருத்துவ வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரத்துக்கு பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்த அனுமதி உண்டு. மற்றபடி தேவையின்றி வெளியில் வருவோர் கண்காணிக்கப் பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முக்கிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இன்று முழு ஊரடங்கு என்பதால், தமிழகம் முழுவதும் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago