தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து மத்திய குழுவினர் ஏற்கெனவே 2 முறை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கியதுடன், மத்திய அரசுக்கும் அறிக்கை அளித்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, தொழில், உள் வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலர் ராஜேந்திர ரத்னு, ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரயூப் சபு, சதீஷ், ஐஏஎஸ் அதிகாரி சுபோத் யாதவா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் மீண்டும் தமிழகம் வருகின்றனர். பெங்களூருவில் இருந்து இன்று சென்னை வரும் இக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பிறகு, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றுமுதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
11 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
13 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
44 mins ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago