மயில் உடலுக்கு போர்த்தப்பட்ட தேசியக் கொடி

By செய்திப்பிரிவு

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகேயுள்ள மின்மாற்றியில் நேற்று முன்தினம் 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில் சிக்கி உயிரிழந்தது.

அந்த மயிலின் உடலுக்கு காவலர் ஒருவர் தேசியக் கொடி போர்த்தி, அஞ்சலி செலுத்தினார். பின்னர், மயிலின் சடலம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கிடையே, மயிலின் சடலத்தில் தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலைச் சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத் துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல் என்ற சர்ச்சை எழுந்தது. காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், இவ்விவகாரம் தொடர்பாக துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்