4 மாவட்டங்களில் இன்றுமுதல் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்

By செய்திப்பிரிவு

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அத்துடன், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கை நேற்றுவரை (5-ம் தேதி) வரை நீட்டித்திருந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று (6-ம் தேதி) முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள வங்கிகள் இன்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன்காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமான நேரத்தில் செயல்படும். அத்துடன், பொதுமக்களும் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகளுக்குள் அனுமதிக்கப்படுவர்.

எனினும், மதுரையில் முழு ஊரடங்கு 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு உள்ள வங்கிக் கிளைகள் வரும் 10-ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே செயல்படும். பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்பட மாட்டாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்